27.7 C
Tamil Nadu
28 May, 2023
FootballSports

ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி உடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

தனது 17வது வயதில் முதல் போட்டியில் பங்கேற்ற பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, லா லிகா தொடரில் அதிக கோல்களை ( 440க்கும் மேல்) அடித்த வீரர், 36 ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார்.

மேலும் பார்சிலோனா அணிக்காக 722 போட்டிகளில் விளையாடி 629 கோல்களை அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பையில் 5 கோல் அடித்துள்ளார்.

இது தவிர தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இந்நிலையில், கத்தாரில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரோடு தனது ஓய்வை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

See also  இந்தியா - வங்கதேசம்: 2 வது டெஸ்டில் கேப்டன் கே எல் ராகுல் விலகல்?

Related posts