வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் 11ஆம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு. 12ஆம் தேதி வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை அதிகனமழை பெய்யும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக – புதுச்சேரி கடற்கரை பகுதியை 12ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும். பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.