மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிற நிலையில் அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர்
மீதமிருத்தும் ஒரு சதவிகிதம் பேரையும் இணைப்பது பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது
நுகர்வோர்களை நேரில் சந்தித்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தவும் மின்சார வாரியம் திட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.