மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி இறப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணியளவில் காலமானார். பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதிக்கு 94 வயதாகிய நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார்.
அதனைதொடந்து அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் மு.க .ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசையாசிரியராகப் பணியாற்றிவர் என்பதோடு, பாரதியாரின் பாடல்களை இசைவடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைசிறந்த தமிழ்க்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லலிதா பாரதி அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து லலிதா பாரதி மறைவிற்கு திரைப்பிரபலங்களும் தொழிலதிபர்களும் மேலும் அரசியல்வாதிகள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.