27.7 C
Tamil Nadu
28 May, 2023
EducationTamilnaduViral

2001-02 கல்வியாண்டு முதல், பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

2001-02ம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் தேர்வுக்கடணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்த வேண்டும்.

Www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர்.23 முதல் டிசம்பர் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள 9 தேர்வு மையங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 25 என்ற முகவரிக்கு வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம்.

தேர்வு எழுதவுள்ள பாடங்களை மாணவர்கள் விண்ணப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

See also  நாளை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு திரைப்படம் !

Related posts