திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்த பதிவு ஒன்றை ஆளுநர் மாளிகைகையின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆளுநர் ரவி அவர்கள், பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் பாரதிய கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் வடிவமைத்து வளர்த்து வருகிறது. இதுவே இன்று ஜி20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு எடுத்துக்காட்டுகள் எனவும் அப்படதிவில் குறிப்பிடப்பட்டள்ளது.