தென் தமிழகத்தில் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கன மழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் மேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கன மழை பெய்யக்கூடும்.
மேலும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.