27.7 C
Tamil Nadu
28 May, 2023
IndiaNews

பாகிஸ்தான் ஆளில்லா விமானம் ஆத்துமீறல்

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய ஆளில்லா பாகிஸ்தான் விமானத்தை ராணுவ அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினார்

பஞ்சாப்பின் அமிர்தரசஸ் எல்லையையொட்டிய பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியது. இதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதன்பின்பு வயல்வெளியில் இருந்து அந்த ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது.

இந்த ஆண்டின் டிசம்பரில் முதல் வாரத்தில் இதுவரை 16 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன. நவம்பர் 26-ந்தேதி இதேபோன்று ஆளில்லா விமானம் ஒன்று வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட நாற்கரங்கள் கொண்ட அந்த ஆளில்லா விமானம் பின்பு வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

இவை அனைத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே நாட்டுக்குள் ஊடுருவியுள்ளன. இந்தியாவில் ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தலுக்காகவும் மற்றும் இந்திய வான்வெளியில்உளவு பணி மேற்கொள்வதற்காகவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களின் ஊடுருவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

See also  விக்கெட் விழாமல் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

Related posts