27.5 C
Tamil Nadu
28 May, 2023
NewsTamilnadu

நீச்சல் வீரர்களுக்கு அறிவுறுத்தல்

மாண் டாஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு காவல்துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் மாண்டாஸ் புயல் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை (9-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மீட்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

See also  தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவர் திருவள்ளுவர் - ஆளுநர் ஆர்.என் ரவி!!

Related posts