27.7 C
Tamil Nadu
28 May, 2023
EducationIndiaLife StyleViral

சுவாமி ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் – அதிகாலையில் கோயிலில் குவிந்த பக்தர்கள்…..

சுவாமி ஐயப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வழக்கமாக அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி அன்று மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

அதன்படி,

இந்த ஆண்டுக்கான கார்த்திகை 1-ந் தேதி இன்று பிறந்தது.இதையொட்டி காலையில் பக்தர்கள் குளித்துவிட்டு சந்தனம்,குங்குமம் திலகமிட்டு அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறப்பதற்கு முன்னதாக பக்தர்கள் வரத்தொடங்கினார்கள்.அதன் பிறகு அதிகாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் மாலை போட தொடங்கினார்கள்.பக்தர்கள் ஆர்வத்துடன் அய்யப்பனுக்கு பிடித்த கருப்பு சட்டை,வேட்டியையும் பக்தர்கள் அணிந்து வந்தனர்.

See also  தமிழக முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் திருத்தப்பட்டியல் சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது

Related posts