மண் சார்ந்த வேலைக்கான ஒப்பந்தங்களுக்கு ஜி எஸ்.டி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து துறை தலைவர்களுக்கு நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கால்வாய்கள், அணைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய பணிகளுக்கான ஜி எஸ் டி 12 % லிருந்து 18 % வரை உயர்த்த வேண்டும்.
எனவே அனைத்து பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடும் துறைகளும் 12 % அல்லது 18 % என மதிப்பீடு செய்து தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி விகிதங்களின் அடிப்படையில் கூடுதல் நிதியை முன்கூட்டியே ஒதுக்கினால் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.