திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.