இளையராஜ போன்றவர்களை வைத்து அரசியல் செய்யும் பாஜகவின் கனவு பழிக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் ஜி20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்ததன் பேரில் தான் செல்வதாக கூறினார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
தமிழகத்தில் பாஜகவினர் காமெடி செய்து வருவதாகவும், அவர்கள் செய்யும் காமெடிக்கு அவர்களே சிரித்து கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். பாஜகவை கண்டு யாரும் அச்சப்படுவதற்கு இல்லை என்ற அவர், இளையராஜா போன்றவர்களை வைத்து இங்கு அரசியல் செய்யலாம் என கனவு காணுவதாக தெரிவித்தார்.
தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். இதனை தமிழக மக்கள் பொருட்படுத்தவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.