தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் பேர் மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைத்துள்ளனர்.
தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில்
ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று வரை 60.80 லட்சம் மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று (டிச.6) 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 3.01 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 2.02 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 65.80 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.