வாரிசு திரைப்படத்துக்கு பின்னதாக நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ.
இதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஏற்கனவே விஜய் மற்றும் லோகேஷ் இணைந்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் இவர்கள் இருவரது கூட்டணி மக்களிடையே வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது படத்தில் அதாவது லியோவில் இணைந்திருக்கின்றனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார், இதனிடையே மாஸ்டர் திரைப்படத்துக்கும் அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் லியோ திரைப்படத்தில் ஓர் நட்சத்திர பட்டாளமே நடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் காம்போ கிட்டத்தட்ட சுமார் 14 வருடங்கள் கழித்து மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. மேலும் இதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் , சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் , உள்ளிட்ட முக்கிய பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் டைட்டீல் வெளியிட்ட அன்றே படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் மட்டும் இம்மாதத்தின் இறுதிக்குள் முடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி முதலில் மிஷ்கின், சஞ்சய் தத் அடங்கிய படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதனிடையே நேற்று விஜய் தனது படப்பிடிப்புகளை முடித்து விட்டு சென்னை திரும்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைராலாகி வருகிறது.மேலும் இத்திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் எடுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தேதியை மட்டும் தற்போது வரை தெரிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் மின்னல் வேகத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சமீப நாட்களாக பொதுவாகவே நகரங்களில் சில பகுதிகளில் ஆங்காங்கே நில அதிர்வு உணரப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன்படி நேற்றிரவு காஷ்மீர் பகுதியில் லியோ படப்பிடிப்பு தளங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், படக்குழு தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை தெரிவிக்க, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் தளத்தில் We are safe nanba என பதிவிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாக்கப்பட்டு வருகிறது.