வாரிசு திரைப்படத்துக்கு பின்னதாக நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கி லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரம்மாண்ட முறையில் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி லியோ திரைப்படத்தில் இணைந்திருப்பதே ரசிகர்களின் எதிர்பாரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்ப கட்டத்தில் சென்னையில் தொடங்கி, தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் , அர்ஜூன் என பலர் நடித்து வருகின்றனர். மேலும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் இம்மாதத்தின் இறுதிக்குள் முடிவடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் நடந்து வரும் படப்பிடிப்புகளில், தற்போது மிஷ்கின் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில் மிஷ்கின் சென்னை திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து கௌதம் மேனன் காட்சிகளும் நிறைவடைய இருப்பதாகவும் , அடுத்த கட்டமாக நடிகர் அர்ஜுனின் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே லியோ திரைப்படம் குறித்த மற்றோரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் லியோ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் உயர்தர Red v Raptor xl வகையிலான கேமராவை லியோ படப்பிடிப்பில் பயன்படுத்த இருப்பதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் லியோ திரைப்படத்தில் விஷுவல் காட்சிகள் ட்ரீட்டாக இருக்கப் போகிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.