நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து, தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் இருந்தும் விலகுவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இதன் இடையே சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடித்து வருவதால் மற்ற படங்களுக்கு தேதி ஒதுக்க முடியாமல் பல படங்களை கைவிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் சூர்யா சமீபத்தில் விடுதலை படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்ததும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். இருப்பினும் இப்படம் குறித்த தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் வாடிவாசல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தானு கூறியதாவது,
தற்போது வாடிவாசல் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இத்திரைப்படம் தடைப்படும் என பலர் கூறி வரும் ஆதாரமற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பத்து நிமிடம் புகழுக்காக இது போன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர். படத்தின் வேலைகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, படம் கைவிடுவதாக எந்த எண்ணமும் இல்லை.
வாடிவாசல் சூர்யாவின் கெரியரில் மிகவும் முக்கியமான படம் , அது கைவிடுவது குறித்த எந்த எண்ணமும் அவருக்கும் இல்லை . தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து நிச்சியம் இத்திரைப்படம் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.