லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தது தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இதனிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ஓர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிட்டுள்ளனர், மேலும் இத்திரைப்படம் 3டி முறையில் பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு 23 கெட்டப் என்ற தகவல் எல்லாம் வெளியாகி வைரலானது.
இத்திரைப்படத்தில் நாயகியாக திஷா பத்தானி நடித்து வருகிறார். இத்திரைப்படம் குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணங்கான் திரைப்படத்தில் சில பல கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா பாதியில் வெளியேறினார். இத்தகவல் ரசிகர்களுக்கு பெரும் மாற்றத்தை அளித்தது.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்த திரைப்படங்களை சூர்யா விரைந்து தேர்வு செய்து வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இதையடுத்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா.
வாடிவாசால் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சமீபத்தில் துல்கர்சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.